Wednesday, May 25, 2011

இலங்கையில் ஹோமம்





இலங்கையில் அமைதி வேண்டி மஹா மிருத்யுஞ்சய ஹோமம்
3-11-2006 ல் நடைபெற்றது.

ஸ்ரீ முத்து கிருஷ்ணா மிஷன் டிரஸ்ட் சார்பில் பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மிருத்யுஞ்சய ஹோமம் ஸ்ரீ முத்து கிருஷ்ண ஸ்வாமியின் ஆணையின் வண்ணம் ஹார்ட்டன் பிளேஸ் என்ற நகரில் டாக்டர் திரு . ரகுநாத் இல்லத்தில் நடைபெற்றது.இலங்கை தமிழ் மக்களின் குல தெய்வமான சிதம்பரம் ஸ்ரீ நடராஜரின் அருளால் 3-11-2006 ல் பூர்த்தி நாளன்று பிரதோஷம் தில்லைவாழந்தனர்களைக் கொண்டு ஸ்ரீ கணபதி ,ஸ்ரீ நவக்ரகம், ஸ்ரீ சுதர்சனம்,ஸ்ரீ மகாலக்ஷ்மி, ஸ்ரீ ஆயுஷ்யம் , மற்றும் மஹா மிருத்யுஞ்சய ஹோமம் பூர்த்தி செய்யப்பட்டது . 4-11-2006 காலை கொழும்புவில் இருந்து “மீருகம” என்ற இடத்திற்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறிய பேருந்தில் “ தில்லைவாழ் அந்தணர்களை” அழைத்துச் சென்று பூமி பூஜை செய்து பூஜை அறையில் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பான விருந்தளித்து மாலையில் தில்லை அம்பலவாணருக்கு லக்ஷார்ச்சனை செய்து, விளக்கு பூஜையும் செய்து விழா இனிதே நிறைவேறியது.

இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வாமினி வித்தக விநாயக வடிவு {வித்தம்மா}அவர்களின் அருளாசியுடன் நடைபெற்றது.

No comments:

Post a Comment