Wednesday, December 8, 2010

koil




திருச்சிற்றம்பலம்
திருமுறைகளில் பாடப்பட்ட பாடல்களிளேயே அதிகமான பாடல்களில் இனி எனக்கு பிறவியே வேண்டாம் என்ற பொருளி;ல் தான் பாடல்கள் அமைந்திருக்கும் ஆனால் தில்லையில் மட்டும் அதற்கு மாறாக பிறவி வேண்டும் என்று கேட்டு இரண்டு பாடல்கள் அமைந்திருப்பது என்றால் (தில்லை) சிதம்பரத்தின்; சிறப்பைப் பற்றி நம்மால் எப்படி கூறமுடியும். உணர மட்டுமே முடியும்.
அந்த பாடல்கள் (கோயில்) என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்தில் திருநாவுக்கரசர் ஐந்தாம் (5) திருமுறையில் திருக்குறுந்தொகை என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே. (1)
திருநாவுக்கரசர் நான்காம் (4) திருமுறையில் திருவிருத்தம் என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமின் சிறிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே. (2)
இந்த பதிகப் பாடல் மூலம் மனிதனாகப் பிறந்த அனைவரும் தரிசிக்கவேண்டும் என்கிற கருத்தை நமக்கு காட்டுகிறார். தரிசிக்க முக்தி தரும் தலம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பாகும். உ
திருச்சிற்றம்பலம்
திருமுறைகளில் பாடப்பட்ட பாடல்களிளேயே அதிகமான பாடல்களில் இனி எனக்கு பிறவியே வேண்டாம் என்ற பொருளி;ல் தான் பாடல்கள் அமைந்திருக்கும் ஆனால் தில்லையில் மட்டும் அதற்கு மாறாக பிறவி வேண்டும் என்று கேட்டு இரண்டு பாடல்கள் அமைந்திருப்பது என்றால் (தில்லை) சிதம்பரத்தின்; சிறப்பைப் பற்றி நம்மால் எப்படி கூறமுடியும். உணர மட்டுமே முடியும்.
அந்த பாடல்கள் (கோயில்) என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்தில் திருநாவுக்கரசர் ஐந்தாம் (5) திருமுறையில் திருக்குறுந்தொகை என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே. (1)
திருநாவுக்கரசர் நான்காம் (4) திருமுறையில் திருவிருத்தம் என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமின் சிறிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே. (2)
இந்த பதிகப் பாடல் மூலம் மனிதனாகப் பிறந்த அனைவரும் தரிசிக்கவேண்டும் என்கிற கருத்தை நமக்கு காட்டுகிறார். தரிசிக்க முக்தி தரும் தலம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பாகும்.

Tuesday, December 7, 2010

THIRUTHANDAGAM


சிவமயம்
திருத்தாண்டகம்

தாண்டகவேந்தர் என்று சிறப்புப்பெயர் பெற்ற திருநாவுக்கரசர் தமது திருவாரூர் திருத்தாண்டகத்தில் ஒரு கேள்வியை கேட்டு அதற்கு சிதம்பரம் திருத்தாண்டகத்தில் பதிலையும் தந்திருக்கிறார்கள் என்றால் அது அபூர்வமாக அமைந்திருக்கிறது.
அவை

பாடகம்சேர்மெல்அடிநற்பாவையாளும்
நீயும்போய்ப்பார்த்தனதுபலத்தைக்காண்பான்
வேடனாய்வில்வாங்கிஎய்தநாளோ
விண்ணவர்க்கும்கண்ணவனாய்நின்றநாளோ
மாடமொடுமாளிகைகள்மல்குதில்லை
மணிதிகழும்அம்பலத்தைமன்னிக்கூத்தை
ஆடுவான்புகுவதற்குமுன்னோபின்னோ
அணிஆரூர்கோயிலாக்கொண்டநாளே. (1)

கார்ஆர்கமழ்கொன்றைக்கண்ணி
சூடிக்கபாலம்கைஏந்திக்கணங்கள்பாட
ஊரார்இடுபிச்சைகொண்டுஉழலும்
உத்தமராய்நின்றஒருவனார்தாம்
சீர்ஆர்கழல்வணங்கும்தேவதேவர்
திருஆரூர்மூலட்டானம்மேயார்
போர்ஆர்விடைஏறிப்பூதம்சூழப்
புலியூர்ச்சிற்றம்பலமேபுக்கார்தாமே. (2)

அதாவதுமுதல்பாடலில்
மாடமொடுமாளிகைகள்மல்குதில்லை
மணிதிகழும்அம்பலத்தைமன்னிக்கூத்தை
ஆடுவான்புகுவதற்குமுன்னோபின்னோ
அணிஆரூர்கோயிலாக்கொண்டநாளே.

என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

பிறகு சிதம்பரம் திருத்தாண்டகத்தில் அதற்கானபதிலையும் தந்திருக்கிறார்


சீர்ஆர்கழல்வணங்கும்தேவதேவர்
திருஆரூர்மூலட்டானம்மேயார்
போர்ஆர்விடைஏறிப்பூதம்சூழப்
புலியூர்ச்சிற்றம்பலமேபுக்கார்தாமே.


என்று (அதாவது)
திருவாரூர்மூலட்டானத்தில்அருள்புரியும்பெருமான்காளைஏறிபூதகணங்கள்புடைசூழபுலியூர்என்றுஅழைக்கப்படுகின்றதில்லை (சிதம்பரத்தை)சென்றுசேர்ந்தார்என்றுபாடலைபாடியிருக்கிறார்.
பொதுவாகஒருவழக்குஉண்டு (திருவாரூரில்பிறக்கமுக்தியும்சிதம்பரத்தைதரிசிக்கமுக்தியும்) திருவாரூரில்சாயரக்ஷைபூஜையையும்சிதம்பரத்தில்அர்த்தஜாமபூஜையையும்பார்க்கவேண்டும்என்றும்அதன்படிஇந்தசிறப்புஅமைந்திருக்கிறது.
தினமும்காலை (6-00 மணி)தில்லை நடராஜப்பெருமான் தன்னுடையகலைகளை எல்லா ஆலயங்களுக்கும் அனுப்பி ஆங்காங்கே நடைபெறும் பூஜைகளை ஏற்று இரவு பத்துமணிக்குதில்லை(சிதம்பரத்தை) வந்துசேர்கிறது எனவே முடிந்தவர்கள் முயற்சி செய்து முக்திபெறலாமே. (இப்படி தரிசித்தவர்களைப்பற்றி கேட்டதுண்டு, பார்த்ததும் உண்டு)

சிதம்பரம்கோயில்காலை 6 மணிமுதல்மதியம் 12 மணிவரை
திறந்திருக்கும்நேரம்மாலை 5 மணிமுதலஇரவு 10 மணிவரை

Tuesday, November 16, 2010

வேதம் & திருமுறை

சிவமயம்
வேத சாஸ்திரங்களுக்கும் திருமுறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
பஞ்ச பூதங்களைப்பற்றி தேவாரம் திருவாசகத்தில் கூறப்பட்டிருக்கும் சில கருத்துக்களை அறியலாம்.
திருவாசகத்தில் போற்றித் திருவகவல் என்ற பகுதியில் பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி!(5)
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி!(4)
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி!(3)
வெளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!(2)
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!(1) என்றும்
திருநாவுக்கரசர் திருப்புள்ளிருக்கு வேளுர் திருத்தாண்டகத்தில்
1.மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
2.வீசும் கால்தன் அகத்தில் இரண்டாம் செந்தீத்
3.தன் உருவில் மூன்றாய்த்
4.தாழ்புனலின் நான்காய்த்
5.தரணி தலத்து அஞ்சாகி என்றும் திருமுறையில் காணப்படுகிறது.
இதையே வேத ஆகம முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் இந்த பஞ்சபூதங்களுக்கு என்று பஞ்சபிரம்ம மந்திரங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.
அவை,
ஐந்து முகங்கள் கொண்ட தீபம் ஈசானம் என்றும்,(5)
நான்கு முகங்கள் கொண்ட தீபம் தத்புருஷம் என்றும்;,(4)
மூன்று முகங்கள் கொண்ட தீபம் அகோரம் என்றும்,(3)
இரண்டு முகங்கள் கொண்ட தீபம் வாமதேவம் என்றும்,(2)
ஒரு முகம் கொண்ட தீபம் ஸத்யோஜாதம் என்றும்,(1)
தீபாராதனை செய்யப்படுகிறது.
இவற்றின் முழு மந்திரங்கள் பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்று வழங்கப்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் எண்ணிக்கைகள் ஏறு வரசையிலும், இறங்கு வரிசையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும்.
இந்த கட்டுரை ஜூன் 2007 ல் சைவப்பேரொளியில் வெளியிடப்படட்து.
பாலஜோதிடர் சித்தாந்தரத்தினம் ப்ரம்மஸ்ரீ உ.வெங்கடேச தீட்சிதர்
Cell : 9894406321
Mail : uvenkatesadeekshithar@gmail.com

Wednesday, July 14, 2010

வருக நல்வரவு
புதிய இணை
தளம் உருவாக்கபட்டுள்ளது முகவரி www.annadhaanam.in

நன்றி