Sunday, December 18, 2011
திருமந்திரம்
சைவத்தில் திருமுறைகள் என்பது பன்னிரண்டாகும் .அவற்றில் முதல் மூன்று திருமுறைகள் திரு ஞானசம்பந்தர் அருளியது.நான்கு, ஐந்து,ஆறு, திருமுறைகள் திருநாவுக்கரசர் அருளிச் செய்தது. ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது, எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளியது. ஒன்பதாம் திருமுறை சேந்தனார் மற்றும் சிலரின் பாடல்கள் உள்ளன. பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரமாகும். பதினோராம் திருமுறைநம்பியாண்டார் நம்பிகள் வகுத்தது. அவருடைய நூலும் உண்டு. பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) ஆகும். இதில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தை தரிசனா தொலைக் காட்சியில் தினமும் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள் அதன் ஒரு பகுதி இங்கே வழங்கப் படுகிறது. இதன் தொடர்ச்சியை நம்முடைய இணைய தளத்தில் பார்த்து கேட்டு பயன் பெற வேண்டுகிறேன். இங்கே கிளிக் செய்யவும். http://youtu.be/QORYuQm2N8A
Tuesday, November 8, 2011
காசி யாத்திரை
காசி நகருக்கு இந்த திரிவேணி சங்கம நீர் தான் வடக்கு நோக்கி பாய்ந்து நம் பாவங்களைப் போக்குகிறது. ஆனால் நாம் கங்கையை தனியாக எடுத்துக் கொண்டு அந்த கங்கை நீரை(சிறிதளவு) காசி (வாரணாசி) சென்று விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அந்த மீதம் இருக்கும் நீரை எடுத்துக்கொண்டு அதை மறுமுறை ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம்ஸ்ரீ ராமநாத சுவாமிக்கு கங்கை நீர் மட்டும் தான் அபிஷேகம் செய்யப் படும். இந்த காசி யாத்திரை பூர்த்தி ஆகும். இந்த யாத்திரையின் மேலும் சில விபரங்களை கீழே காணலாம்.
Friday, November 4, 2011
மஹாநவமி
நம்முடைய இந்து மதத்தில் எத்தனை விதமான நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை பறந்து விரிந்த இந்த தேசத்தில் நீருக்கு பஞ்ச பூதங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன்படி கங்கை கங்கோத்ரியில் உற்பத்தியாகி நம்முடைய தேசம் முழுவதும் பரவி மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலப்பது நாம் அறிந்ததாகும். அப்படி கங்கை ஐப்பசி (துலாம்) மாதம் காவேரியில் கலப்பதற்காக வடக்கிருந்து கிளம்பி சிதம்பரத்திற்கு இன்று மஹாநவமி (கங்கை) நடராஜர் அபிஷேகத்திற்கான பரமானந்த கூபம் என்று அழைக்கப் படுகிற கிணற்றிற்கு வருகிறாள் என்பது ஐதீகம்.அதன்படி இன்று கங்கைக்கு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு பூஜை செய்த புனித நீர் வழங்கப் பட்டது. இங்கிருந்து கிளம்பி கடை முகத்திற்கு மயிலாடுதுறை சென்று அங்கிருந்து கார்த்திகை அமாவாசை அன்று திருவிசலூர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவர்களின் வீட்டில் இருக்கும் கிணற்றிற்கு செல்வதாக ஐதீகம் அங்கிருந்து மாசி மாதம் கும்பகோணம் மஹா மக குளம் சென்று நம் பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். இந்தியா முழுவதும் இது போன்ற இன்னும் பல விதமான நம்பிக்கைகள் உள்ளது அதில் இது சிறப்பாகும்.
Tuesday, October 11, 2011
சிதம்பரம் மஹா ருத்ரம்
சிதம்பரம் மஹா ருத்ரம்
.(தில்லை ஸ்ரீ நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகம் நடைபெறுகிறது. .மூன்று அபிஷேகங்கள் நக்ஷத்திரத்திலும் ,(திருவோணம் (சித்திரை) , உத்திரம் (ஆனி), திருவாதிரை (மார்கழி) , மூன்று அபிஷேகம் திதியிலும் ( வளர்பிறை சதுர்த்தசி ஆவணி ,புரட்டாசி , மாசி ) தினமும் நடைபெறுவது ஆறு கால அபிஷேகம் (மார்கழியிலும், கிரஹணத்தின் போதும் மேலும் ஒரு காலமும், சிவராத்திரியில் மூன்று +ஒன்று (அர்த்தஜாமம்) என்று கூடுதலாகும்.) மனிதர்களுக்கு ஒருநாள் 24 மணிநேரம், தேவர்களுக்கு ஒரு நாள் (365 நாட்கள் ) அதன் படி மனிதர்களுக்காக தினமும் ஆறு காலமும் , தேவர்களுக்காக வருஷத்தில் ஆறு அபிஷேகமும் நடைபெறுகிறது.( அயனங்கள் இரண்டு தட்சிணாயணம் (இரவு வேளை ) (ஆவணி (சாயரக்ஷை ) , புரட்டாசி (இரவு இரண்டாம் காலம்) , மார்கழி (காலசந்தி ) உத்தராயணம் (பகல் வேளை ) (சித்திரை (பகல் இரண்டாம் காலம்) ,ஆனி (உச்சிக்காலம்) ,மாசி (அர்த்தஜாமம்).
மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகளைப் பற்றி விரிவாக காண்போம்.
Monday, September 19, 2011
ஜெயங்கொண்டப் பட்டினம்
சிதம்பரம் வட்டம் ஜெயங்கொண்டப் பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சௌந்தர்யம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர், செஞ்சி விநாயகர்,மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் என்கிற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 13.09.2011 முதல் தொடங்கி நான்கு கால பூஜைகள் நடந்தது. வெள்ளி 16-09-2011 காலை கோ பூஜையும் தொடர்ந்து மகாகும்பாபிஷேகமும் ,மஹா அபிஷேகமும் ,அன்னதானமும், இரவு வீதிஉலாவும் நடந்தது.
Friday, September 9, 2011
ஸ்ரீ கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
8-09-2011காலை 8.30 மணியளவில் கோவிலாம்பூண்டி கிராமத்தில் கீழத்தெரு ஸ்ரீ கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிதம்பரம் வெங்கடேச தீக்ஷிதர் நடத்திவைத்தார். கீழத்தெருவில் நூதனமாக கட்டப்பட்ட ஆலயத்தில் சப்த கன்னியம்மன் மற்றும் வீரனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது புதன் கிழமை தொடங்கி யாக பூஜைகள் நடைபெற்றது. அதன் சில படங்கள் இங்கே .
Monday, August 1, 2011
"ஆன்மிக சேவைச் செம்மல்"
Hotel Palmgrove Nungampakkam Chennai (30-07-2011) ஐந்து மணிக்கு நடைபெற்ற விழாவில்சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதருக்கு விருது வழங்கப் படுகிறது. உடன் இருப்போர் (வலமிருந்து) அமரசிகாமணி, A.R.ஸ்ரீனிவாசன் ,V.S.ராகவன் ,L.I.C.நரசிம்மன் ,T.P.கஜேந்திரன்,
Friday, July 22, 2011
தச்சங்குளம் கொடியேற்றம்
Monday, July 18, 2011
சங்கடஹர சதுர்த்தி
18-07-2011 இன்று சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் பதினோரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திருநாரையூரில் நடைபெற்ற அன்னதான படங்கள் சில இங்கே காணலாம். அன்னதானம் செய்வதால் வரும் பலன்கள் பற்றியும் கோயில் ஸ்தல வரலாறு என்று எல்லா செய்திகளுக்கும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும் www.annadhaanam.in
Monday, July 4, 2011
தாயுமானவர் விழா
சிதம்பரத்தில் அம்பலத்தாடி மடம் தெரு , நகராட்சி துவக்கப் பள்ளியில் 1.7.2011 வெள்ளி மாலை 5 மணிக்கு யோகாசன ஆலயம் சார்பாக மஹரிஷி தாயுமானவர் விழா நடைபெற்றது.
Sunday, July 3, 2011
இரட்டைப் புலவர்கள்
Tuesday, June 28, 2011
கொடியேற்றம்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் (28-06-2011) இன்று காலை ஏழு மணிக்கு கொடியேற்றம் நடைபற்றது. உமாபதி சிவம் கூற்றின்படி தெற்கு கோபுரத்திலும் கொடிஏற்றப் பட்டது. .அதனை தொடர்ந்து வேதபாராயணமும் ,திருமுறை பாராயணமும் தொடங்கியது .இதனை மாணிக்கவாசகர் இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால் இருக்கொடு தோத்திரம் ஓதினர் ஒருபால் அழுகையர் ஒருபால் , தொழுகையர் ஒரு பால் என்று வர்ணித்துதிருவாசகத்தில் பாடி இருக்கிறார்கள் . சரியாக ஏழு மணிக்கு கோடி ஏறியது .அதனை உத்சவ ஆசாரியர் .ஸ்ரீ சிவ.சிதம்பரேஸ்வர தீக்ஷிதர் ஏற்றினார். அடுத்த பத்து நிமிடங்கள் வண்ண வண்ண ஆடைகள் கொடிமரத்துக்கு சாற்றப்பட்டது அதனை தொடர்ந்து அடுக்கு தீபாராதனையும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது . உலக நன்மைக்காக ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியிடம் ப்ரார்த்திக்கப் பட்டது.
Tuesday, June 7, 2011
திருத்தலையூர் மகா ருத்ரம்
Wednesday, May 25, 2011
இலங்கையில் ஹோமம்
இலங்கையில் அமைதி வேண்டி மஹா மிருத்யுஞ்சய ஹோமம்
ஸ்ரீ முத்து கிருஷ்ணா மிஷன் டிரஸ்ட் சார்பில் பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மிருத்யுஞ்சய ஹோமம் ஸ்ரீ முத்து கிருஷ்ண ஸ்வாமியின் ஆணையின் வண்ணம் ஹார்ட்டன் பிளேஸ் என்ற நகரில் டாக்டர் திரு . ரகுநாத் இல்லத்தில் நடைபெற்றது.இலங்கை தமிழ் மக்களின் குல தெய்வமான சிதம்பரம் ஸ்ரீ நடராஜரின் அருளால் 3-11-2006 ல் பூர்த்தி நாளன்று பிரதோஷம் தில்லைவாழந்தனர்களைக் கொண்டு ஸ்ரீ கணபதி ,ஸ்ரீ நவக்ரகம், ஸ்ரீ சுதர்சனம்,ஸ்ரீ மகாலக்ஷ்மி, ஸ்ரீ ஆயுஷ்யம் , மற்றும் மஹா மிருத்யுஞ்சய ஹோமம் பூர்த்தி செய்யப்பட்டது . 4-11-2006 காலை கொழும்புவில் இருந்து “மீருகம” என்ற இடத்திற்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறிய பேருந்தில் “ தில்லைவாழ் அந்தணர்களை” அழைத்துச் சென்று பூமி பூஜை செய்து பூஜை அறையில் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பான விருந்தளித்து மாலையில் தில்லை அம்பலவாணருக்கு லக்ஷார்ச்சனை செய்து, விளக்கு பூஜையும் செய்து விழா இனிதே நிறைவேறியது.
இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வாமினி வித்தக விநாயக வடிவு {வித்தம்மா}அவர்களின் அருளாசியுடன் நடைபெற்றது.
Saturday, May 21, 2011
திருக்கல்யாணம்
சீர்காழி மாநகரில் பிறந்த ஞான சம்பந்தர் அன்னையின் திரு முலைப்பால் உண்டு ஞானம் பெற்றார். பல அற்புதங்களை செய்தார். சிவாலயங்கள் சென்று பதிகம் பாடி வழிபட்டார். உடன் திரு நீல கண்ட யாழ்ப்பாணர் இவருடன் மதங்க சூளாமணியார் இசை வழிபாடு செய்தார். அறுபத்து மூவரில் இருவர் 1. திருநீலநக்கர் ,2 . முருக நாயனார், என்று ஏராளமான சிவனடியார்களுடன்ஐக்கியம் ஆனார்கள் .
19.05.2011 காலை உபநயனம் செய்வித்து இரவு மாலைமாற்றல் , வைதீக முறைப்படி ஸ்தோத்ர பூர்ணாம்பிகை யுடன் திரு ஞான சம்பந்தர் திருமணம் நடைபெற்றது. அதற்கு சிதம்பரத்தில் இருந்து திருமண விருதுகள் மாலை களுடன் கொண்டு சென்று சாற்றப் பட்டது.