Tuesday, June 28, 2011

கொடியேற்றம்


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் (28-06-2011) இன்று காலை ஏழு மணிக்கு கொடியேற்றம் நடைபற்றது. உமாபதி சிவம் கூற்றின்படி தெற்கு கோபுரத்திலும் கொடிஏற்றப் பட்டது. .அதனை தொடர்ந்து வேதபாராயணமும் ,திருமுறை பாராயணமும் தொடங்கியது .இதனை மாணிக்கவாசகர் இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால் இருக்கொடு தோத்திரம் ஓதினர் ஒருபால் அழுகையர் ஒருபால் , தொழுகையர் ஒரு பால் என்று வர்ணித்துதிருவாசகத்தில் பாடி இருக்கிறார்கள் . சரியாக ஏழு மணிக்கு கோடி ஏறியது .அதனை உத்சவ ஆசாரியர் .ஸ்ரீ சிவ.சிதம்பரேஸ்வர தீக்ஷிதர் ஏற்றினார். அடுத்த பத்து நிமிடங்கள் வண்ண வண்ண ஆடைகள் கொடிமரத்துக்கு சாற்றப்பட்டது அதனை தொடர்ந்து அடுக்கு தீபாராதனையும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது . உலக நன்மைக்காக ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியிடம் ப்ரார்த்திக்கப் பட்டது.

Tuesday, June 7, 2011

திருத்தலையூர் மகா ருத்ரம்


திருத்தலையூர் மகா ருத்ரம்
63 நாயன்மார்களுள் ஸ்ரீ ருத்ரத்தை ஓதி வீடுபேறு பெற்றவர்
ஸ்ரீ ருத்ரபசுபதிநாயனார் ஆவார்.
இவரை சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில் “முருகனுக்கும், ருத்ர பசுபதிக்கும் அடியேன்” என்றும் நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில்
“அந்தாழ் புனல் தன்னில் அல்லும் பகலும் நின்றாததரத்தால்
உந்தாத அன்போடு ருத்ரம் சொல்லிக் கருத்தமைந்த பைந்தார்
உருத்ர பசுபதி தன்னற்பதி வயற்கே நந்தார் திருத்தலையூர் என்றுரைப்பர் இன் நாநிலத்தே” என்றும்
சேக்கிழார் பெரிய புராணத்தில்
நீடும் அன்பினால் ருத்ரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்ற சீர் “உருத்ர பசுபதியாராம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற (என்றும்)
நான்கு வேதங்களில் மத்திய பாகமாக போற்றப்படும் ஸ்ரீ ருத்ரத்தை
பாவங்கள், வியாதி, மனக்கவலை நீங்க விரும்புபவனும், பொருளை, ஆரோக்யத்தை வேண்டுபவனும் ஜபிக்க வேண்டும் என்றும் இதற்கு ஈடான மந்திரம் இல்லை என்றும்சூதசம்ஹிதையிலும்,
ஸ்ரீருத்ரமே முக்திக்கு வழி என்றும் ஜாபால உபநிஷத்தும், கூறக்கூடிய ஸ்ரீ ருத்ரத்தை உருத்ர பசுபதி நாயனார் கழுத்தளவு நீரில் நின்று நியமத்துடன் ஜபம் செய்து தில்லை நடராஜப் பெருமானின் குஞ்சித பாதத்தை அடைந்தார் .
இவர் அவதரித்த திருத்தலையூரில் கடந்த 3.11.2006 வெள்ளியன்று திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
திருத்தலையூரில் 10.12.2006 அன்று தில்லை வாழ்அந்தணர்களைக் கொண்டு மகா ருத்ர பாராயணமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது.
இதன் சிறப்பை உணர்ந்த திருமூலர் “வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே” என்று திருமந்திரத்தில் பாடி இருக்கிறார்.
இந்த வைபவத்தை ஸ்ரீ இஷ்ட சித்தி வினாயகர் பக்தர்கள் சென்னை, சூளைமேடு பகுதியில் இருந்து வந்து சிறப்புற நடத்தினார்கள்.
இந்த திருத்தலையூரில் ஸ்ரீ பார்வதி சமேத பரமமேஸ்வரர் ஆலயமும், உருத்ர பசுபதி நாயனார் கழுத்தளவு நீரில் நின்று ஜபம் செய்த திருக்குளமும் இன்றும் காண முடிகிறது.
அவசியம் ஒரு முறை சென்று அருள் பெற்று வாருங்கள்.
குறிப்பு. தலையூர் ,கும்பகோணம் to காரைக்கால் பேருந்து சாலையில் கொல்லுமாங்குடியில் இருந்து கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் பாவட்டக்குடி (மதகடி) பேருந்து நிறுத்தம்