Tuesday, June 28, 2011
கொடியேற்றம்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் (28-06-2011) இன்று காலை ஏழு மணிக்கு கொடியேற்றம் நடைபற்றது. உமாபதி சிவம் கூற்றின்படி தெற்கு கோபுரத்திலும் கொடிஏற்றப் பட்டது. .அதனை தொடர்ந்து வேதபாராயணமும் ,திருமுறை பாராயணமும் தொடங்கியது .இதனை மாணிக்கவாசகர் இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால் இருக்கொடு தோத்திரம் ஓதினர் ஒருபால் அழுகையர் ஒருபால் , தொழுகையர் ஒரு பால் என்று வர்ணித்துதிருவாசகத்தில் பாடி இருக்கிறார்கள் . சரியாக ஏழு மணிக்கு கோடி ஏறியது .அதனை உத்சவ ஆசாரியர் .ஸ்ரீ சிவ.சிதம்பரேஸ்வர தீக்ஷிதர் ஏற்றினார். அடுத்த பத்து நிமிடங்கள் வண்ண வண்ண ஆடைகள் கொடிமரத்துக்கு சாற்றப்பட்டது அதனை தொடர்ந்து அடுக்கு தீபாராதனையும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது . உலக நன்மைக்காக ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியிடம் ப்ரார்த்திக்கப் பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment