Tuesday, November 8, 2011

காசி யாத்திரை











பொதுவாக காசி யாத்திரை என்பது திருமணத்திற்கு முன் நடத்தப் படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். ஆனால் இந்த காசி என்பது முறையாக போய் வருவது. முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கே அக்னி தீர்த்த கரையில் மண் எடுத்துக் கொண்டு அலஹாபாத் சென்று அங்கே (முதல் முறையாக தம்பதியாக செல்பவர்கள் வேணி தானம் செய்ய வேண்டும்) சங்கல்பம் செய்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வந்த மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்து அதை திரிவேணி சங்கமத்தில் விட்டு விட்டு அங்கே தான் தூய கங்கை எடுத்துக் கொண்டு (இங்கே கங்கை,யமுனை, சரஸ்வதி(அந்தர்வாகினி) மூன்றும் சேருமிடம் ஆகும்.


காசி நகருக்கு இந்த திரிவேணி சங்கம நீர் தான் வடக்கு நோக்கி பாய்ந்து நம் பாவங்களைப் போக்குகிறது. ஆனால் நாம் கங்கையை தனியாக எடுத்துக் கொண்டு அந்த கங்கை நீரை(சிறிதளவு) காசி (வாரணாசி) சென்று விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அந்த மீதம் இருக்கும் நீரை எடுத்துக்கொண்டு அதை மறுமுறை ராமேஸ்வரம்
ஸ்ரீ ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம்ஸ்ரீ ராமநாத சுவாமிக்கு கங்கை நீர் மட்டும் தான் அபிஷேகம் செய்யப் படும். இந்த காசி யாத்திரை பூர்த்தி ஆகும். இந்த யாத்திரையின் மேலும் சில விபரங்களை கீழே காணலாம்.

அலஹாபாத் நகரில் சிவமடம் உள்ளது. அங்கே ஸ்ரீ நடேச சாஸ்திரிகள் அவர்களின் தலைமுறையினர்கள் திரு.கணேசன்,திரு.சுப்ரமணியம், திரு வெங்கடேஷ் ஆகியோர் சிறந்த முறையில் உதவிகள் செய்து நம் கடமைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் .

அங்கிருந்து காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாக்ஷி, அன்னப்பூரணி,மற்றும் பைரவரை வழிபட்டுவேறு மாதங்களில் செல்பவர்கள்(தீபாவளி நாட்களில் சென்றால் தங்க அன்னப்பூரணி,தங்க விசாலாக்ஷி ஸ்வர்ணலிங்கேஸ்வரர்(நாட்டுக் கோட்டை செட்டியார் சத்திரம்), அன்னக்கூடு (லட்டு தேர்) இந்த லட்டு தேர்(நகராது) எல்லா ஆலயங்களிலும் எல்லா விதமான உணவு பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப் பட்டு வைத்திருப்பார்கள் ஆனந்தமாக கண்டு களிக்கலாம். அந்த பிரசாதங்களை பின்னர் பொது மக்களுக்கு வழங்குவார்கள்) நகரில் இருக்கும் இன்னும் சில விசேஷ கோயில்களுக்கு சென்று விட்டு (காசி ராஜா அரண்மனை,பனராஸ் இந்து பல்கலைக் கழகம்,சங்கட விமோசன ஹனுமான்,சோழி அம்மன், வாராஹி அம்மன், துளசி மானச மந்திர்(ராமாயண நிகழ்வுகள்), துர்க்கை அம்மன் கோயில், திலபாண்டேஷ்வர் கோயில்,) நிறைய பொருட்கள் வாங்கலாம். யாத்திரையை பூர்த்தி செய்து அவரவர் இல்லங்களுக்கு சென்று வாங்கி வந்த பொருட்கள் கங்கை நீர்,போன்ற வற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து உறவினர்களைக் கூப்பிட்டு அன்னதானம் செய்து எல்லாவிதமான நண்மைகளையும் அடையலாம்.

இந்த யாத்திரைப் பற்றி சந்தேகம் இருந்தால் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டால் சொல்லக் காத்திருக்கிறேன். உ.வெங்கடேச தீக்ஷிதர் 09894406321

Friday, November 4, 2011

மஹாநவமி



நம்முடைய இந்து மதத்தில் எத்தனை விதமான நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை பறந்து விரிந்த இந்த தேசத்தில் நீருக்கு பஞ்ச பூதங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன்படி கங்கை கங்கோத்ரியில் உற்பத்தியாகி நம்முடைய தேசம் முழுவதும் பரவி மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலப்பது நாம் அறிந்ததாகும். அப்படி கங்கை ஐப்பசி (துலாம்) மாதம் காவேரியில் கலப்பதற்காக வடக்கிருந்து கிளம்பி சிதம்பரத்திற்கு இன்று மஹாநவமி (கங்கை) நடராஜர் அபிஷேகத்திற்கான பரமானந்த கூபம் என்று அழைக்கப் படுகிற கிணற்றிற்கு வருகிறாள் என்பது ஐதீகம்.அதன்படி இன்று கங்கைக்கு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு பூஜை செய்த புனித நீர் வழங்கப் பட்டது. இங்கிருந்து கிளம்பி கடை முகத்திற்கு மயிலாடுதுறை சென்று அங்கிருந்து கார்த்திகை அமாவாசை அன்று திருவிசலூர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவர்களின் வீட்டில் இருக்கும் கிணற்றிற்கு செல்வதாக ஐதீகம் அங்கிருந்து மாசி மாதம் கும்பகோணம் மஹா மக குளம் சென்று நம் பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். இந்தியா முழுவதும் இது போன்ற இன்னும் பல விதமான நம்பிக்கைகள் உள்ளது அதில் இது சிறப்பாகும்.