Thursday, May 12, 2011

குருப்பெயர்ச்சி மகா யாகம்


கடலூர் மாவட்டம் ,சிதம்பரம் வட்டம், எறும்பூர் கிராமத்தில் ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத
ஸ்ரீ கதம்பவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்ரகங்களுக்கு குருப் பெயர்ச்சி விழா கொண்டாடப் பட்டது. 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டு தோறும் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடுவது வழக்கம் . அதே போல் இந்த ஆண்டும் குருப்பெயர்ச்சி
யைஒட்டி நவக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது .அதனை தில்லைவாழ்
அந்தணர்கள் பிரம்ம ஸ்ரீ உ.வெங்கடேசதீக்ஷிதர், உ.கேதார தீக்ஷிதர் நடத்தி வைத்தனர் .
இரவு 10.30 க்கு தொடங்கி நள்ளிரவு 1.05 வரை நவக்ரகங்களுக்கு குருப்பெயர்ச்சி ஹோமம் நடைபெற்றது. தக்ஷினாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

No comments:

Post a Comment