Friday, April 8, 2011

sudarsana homam

இந்து மதத்தில் இறைவனுக்கு ஏதேனும் அர்ப்பணிக்க நினைத்தால் அதை அக்னி மூலமாக தான் கொடுக்க முடியும் என்று வழி காட்டி இருக்கிறார்கள் . அதன் படி வியாழக் கிழமை(7.4.2011) அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே அங்கராய நல்லூரில் திரு வெங்கட்ராமன் வீட்டில் வேண்டுதளுக்காக ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரக ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ மகாலக்ஷ்மி ஹோமம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் நடைபெற்றது . அந்த ஹோமத்தில் ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்த பொழுது அக்னி ஜ்வாலயில் பக்கத்தில் இருக்கும் (புனித நீர் கலசம்) ஸ்ரீ விஜயவல்லி சமேத ஸ்ரீ சுதர்சன மூர்த்தி இருக்கக்கூடிய இடத்தை நோக்கி ஒரு கருடன் உருவம் வந்து வழிபடுவதை இந்த படத்தில் காணலாம் . இந்த படத்தில் ஹோமம் செய்த அக்னியில் தனியாக மற்றும் மாதிரி (கருடன் )படம் வைக்கப்பட்டுள்ளது . இந்த ஹோமத்தை சிதம்பரம் பாலஜோதிடர் ,சித்தாந்த ரத்தினம் பிரம்மஸ்ரீ உ. வெங்கடேச தீக்ஷிதர் அவர்கள் நடத்தி வைத்தார்கள் . இந்த அதிசயத்தை எல்லோரும் கண்டு களிக்க வேண்டும் .

No comments:

Post a Comment