Saturday, December 10, 2016

மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவம் ( 11-01-2017)



                                          
                                       சிவமயம்

                                    திருசிற்றம்பலம்
                                   தில்லை
     
மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவம் ( 11-01-2017)
                     தன்னை மற்ற மதத்தினரும் வணங்கும் பாக்யத்தை          அளித்துள்ளார். ஈசன் உன்னிடம் பொன்னையோ பொருளையோ விரும்பவில்லை உன் பக்தியைத் தான் ஏற்கிறார். தன்னை நம்பியவர்களுக்கு பரம்பொருளாக விளங்குகின்றார். தானே ராஜாவாக யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்று அறிந்து அருள்பாலிக்கின்றார். தன்னை பூஜிக்க கைலாயத்திலிருந்து தில்லை மூவாயிரவரை மூவாயிரம் ரதத்தில் அழைத்து வந்த பெருமை நடராஜருக்கு உண்டு.                
சிதம்பரம்:  
                  சிதம்பரம் ஒரு மஹா புண்ய க்ஷேத்ரம். பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலம். ஐயன் அடியை சேர ஓர் எளிய முக்தி ஸ்தலம். கோயில் என்ற வார்த்தைக்கு பொருள் சிதம்பரம். நடராஜரை வணங்க கோடி கோடியாக பணம் வேண்டாம், வரிசையில் நிற்க வேண்டாம், மனம் இருந்தாலே போதும். உலகத்தின் மைய புள்ளியாக அமைந்திருக்கும் சிறப்புடையது. சந்திரமௌலீஸ்வரர் முதல் ரத்னசபாபதி வரை யாரும் கேட்காமல் அளித்தவர். மற்றொரு சிறப்பு சிவ வைணவ ஸ்தலம். நடராஜருக்கு வலது புறத்தில் கோவிந்தராஜ பெருமாள்(பள்ளிகொண்ட பெருமாள்) அமைந்திருக்கிறார்.
 சிதம்பர ரகசியம்:
           ஒரு ஆணும் பெண்ணும் சமம் என்று இங்கும் நிரூபித்துள்ளார். சைவத்தில் நாம் மூன்று விதமாக வணங்குகின்றோம், அவை-ரூபம்(உருவ வழிபாடு), அரூபம்- (மனதால் உணரும் வழிபாடு),ரூபாரூபம்-(லிங்க வழிபாடு). அதில் அரூபம் என்பது தான் ரகசியம் ஆகும். அரூப வழிபாடு நம் மனதை ஒரு நிலை அடைய செய்யும். சிதம்பர ரகசியம் என்பது          ஸ்ரீ சக்ரமும்(சிவகாமிக்கு உரியது) சிவ சக்ரமும்(நடராஜருக்கு உரியது) ஓரிடத்தில் மந்த்ர ரூபமாகவும், சிற்ப ரூபமாகவும் அமைந்துள்ளது. அது நம்மை போன்ற மானிடர்களின் கண்ணுக்குத்  தெரியாது. ஆதலால் அதன் மேல் பொன்னாலான பில்வ தளங்கள் தொங்க பட்டிருக்கும். அதனை தரிசிக்கும் பொழுது நாம் தீயவைகளை விட்டு பிரிகின்றோம்.
திருவிழாக்கள்:
       சித்திரை – சித்ரா பௌர்ணமி, மஹாபிஷேகம்
           வைகாசி – வைகாசி விசாகம், வைகாசி பூசம் சேக்கிழார் (63) வர் உலா,  
           ஆனி    - ஆனித் திருமஞ்சனம்
           ஆடி    - ஆடிப் பூரம்
           ஆவணி  - பவித்ராரோபனம், மஹாபிஷேகம்
           புரட்டாசி – நவராத்திரி (கொலு) , மஹாபிஷேகம்
           ஐப்பசி   - ஐப்பசி பூரம்(சிவகாமிக்கு), சூரசம்ஹாரம்(செல்வ முத்து குமார சுவாமிக்கு)
           கார்த்திகை – கார்த்திகை தீபம்(சபைக்கு எதிரே)
           மார்கழி    - ஆருத்ரா தரிசனம்
           தை       - தை பூசம், தை அமாவசை(தீர்த்தவாரி)
           மாசி      -  மஹாபிஷேகம், மாசி மகம் (தீர்த்தவாரி)
           பங்குனி   - பங்குனி உத்திரம்
               இது மட்டுமல்லாமல் பௌர்ணமி, அமாவாசைகளில் சிவகங்கையில் தீர்த்தவாரி நடைபெறும். அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் குருபூஜை திருநாட்களில் நடராஜருக்கு எதிரே நாயன்மாரை கொண்டு வந்து இரவு இரண்டாம் காலத்தின் பொழுது சிறப்பு வழிபாடு நடைபெறும். திருஞானசம்பந்தருக்கும், மாணிக்கவாசகருக்கும் மதியம் உச்சி காலத்தில் குருபூஜை நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தில் ஒன்றாம் திருநாள் முதல் எட்டாம் திருநாள் வரை எட்டு நாட்களும் சபையில் ஸ்ரீ நடராஜருக்கு சாயரக்ஷயில் மாணிக்கவாசகர் ஓதுவார் திருவெம்பாவை பாட தீபாராதனையும் தேரன்று ஸ்ரீ நடராஜருக்கு எதிரே அழைத்து வரப்பட்டு தீபாராதனை நடைபெறும். மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவம் ( 11-01-2017) அன்று மாணிக்கவாசகரிடம் ஸ்ரீ நடராஜர் “ஆனி மகத்தன்று வா  என  அழைத்தார். ஆனித் திருமஞ்சனத்தில் எட்டாம் திருநாளன்று (ஆனி மகத்தன்று) மதியம் உசசிகாலத்தில் குருபூஜை நடைபெறும்.















Wednesday, June 1, 2016

ஸ்ரீ லலிதாம்பிகா கோடி அர்ச்சனை மஹா வைபவம்

ஸ்ரீ லலிதாம்பிகா கோடி அர்ச்சனை மஹா வைபவம்
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு கோடி அர்ச்சனை

ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஸஹாயம்
ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் துணை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுக்கா,
கொல்லங்கோடு, புதுகிராமம்
ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம்
ஸ்ரீ லலிதாம்பிகா கோடி அர்ச்சனை
மஹா வைபவம்
நாள்: ஸ்வஸ்திஸ்ரீ துர்முகி வருஷம், ஆடி மாதம் 1ம்தேதி-10ம் தேதி
16.07.2016 – 25.07.2016
நேரம் : காலை 08.30 – 11.30 & மாலை 05.00 – 8.00
-----------------------------------------------------------------------------------
ஓம் ஸகுங்கும விலேபனாம் அலிகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்‌ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம்
அசேஷ ஜனமோஹிநீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதெள ஸ்மரேதம்பிகாம் ||


பக்த ஸ்ரேஷ்டர்களுக்கு,
பாரத புண்ய பூமியில் மஹரிஷிகள், மஹா சித்த புருஷர்கள் செய்த தவத்தின் பயனாக, தெய்வத் திருவருள் பொங்கிடும் வகையில் ஆலயங்கள் அமைத்து பக்தர்கள் யாவருக்கும் பலன் கிடைத்திட வழிவகை செய்தார்கள். தேவதா ஸான்னித்யம் பெருகிட சிறப்பான வழிபாட்டு முறையையும் வகுத்தார்கள்.
அவ்வகையில், கொல்லங்கோடு கிராமம், புதுகிராமம் ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஸ்வாமி - நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோயில் கொண்டு அமைந்து, கேரள ஆலயக் கலை அமைப்பில் அழகுற அமைந்து, சிவாகம முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வரும் அற்புத ஆலயம். கேரள மரபும், ஆகம மரபும் ஒரு சேர அமைந்திட்ட அதிசய ஆலயம். கங்கைக்கு நிகரான காயத்ரி ஆற்றங்கரையில் அமைந்த, காசிக்கு நிகரான புண்ணியங்களை நல்கும் அழகிய ஆலயம். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அளித்து, பக்தர்களின் இடர் நீக்கி, விபத்துக்களை விலக்கி, நோய்களை நீக்கி நீடித்த ஆயுள் அதிகரிக்க நல்கிடும் ஸ்ரீ விஸ்வநாதர் – மிருத்யுஞ்சய லிங்கமாக அமைந்திட்ட நல்லதொரு ஆலயம். நல்ல இல்லற வாழ்வு, திருமண யோகங்கள், வம்ச அபிவிருந்தி அருளும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் விளங்கிடும் வியத்தகு ஆலயம். வருடந்தோறும் நியமங்களின்படி திருவிழாக்கள் சிறப்புற நடந்திடும் சீர்மிகு ஆலயம்.
இவ்வாலயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாந்த்ரீக ப்ரச்னம் பார்க்கையில், கோயிலும், கோயிலைச் சார்ந்த இடங்களும், ஆலயத்தைச் சேர்ந்த பக்தர்களும் மென்மேலும் வளங்களும் நலங்களும் பெருக,இயற்கை இடர்கள் நீங்கி உலக நன்மை பெருக, விவசாயம் செழித்து, மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு, அம்பிகைக்கு கோடி அர்ச்சனை செய்தல் நலம் என்ற தெய்வத் திருவாக்கு கிடைத்திட்டது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் தெய்வத் திருவருளால் மேற்கண்ட தேதியில் நடத்திட உத்தரவும் கிடைத்தது.
நூறு தில்லை வாழ் அந்தணர்கள் எனும் தீக்ஷித பெருமக்களால், லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் அம்பிகையின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி மங்கலப் பொருட்கள் கொண்டு அர்ச்சிப்பது (100x1000=1,00,000) ஒரு லக்ஷார்ச்சனை ஆகும். காலை ஐந்து முறை செய்வது ஐந்து லக்ஷ அர்ச்சனைக்கு ஈடாகும். மாலை ஐந்து முறை செய்வது ஐந்து லக்ஷார்ச்சனைக்கு சமமாகும். ஆக ஒரு நாளில் பத்து லக்ஷம் (10X1,00,000=10,00,000) முறை அர்ச்சனை செய்வது உத்தமம். பத்து தினங்களில், நாளொன்றுக்கு பத்து லக்ஷம் அர்ச்சனைகள் செய்வது (10X10,00,000=1,00,00,000) ஒரு கோடி அர்ச்சனை செய்திடுதலாகிவிடும். அம்பிகைக்கு ஒரு கோடி அர்ச்ச்னை செய்வது ஒரு மாபெரும் வைபவம். ஒரு அர்ச்சனை செய்தாலே பெரும் பலன்களை தந்திடும் அம்பிகை, ஒரு கோடி அர்ச்சனை செய்வதைக் காண்பது தேவியின் பரிபூரணமான அருளை பன்மடங்கு தந்திடும் என்பது நிதர்சனமான உண்மை.
லலிதா ஸஹஸ்ரநாமம் : அம்பிகையே அகில உலகிற்கும் காரணியாக விளங்குபவள் என்பதை பறைசாற்றும் சாக்த வழிபாட்டு முறை, தேவியின் பூரண அருள் பெற பல்வேறு வழிவகைகளை வகுத்துள்ளது. அதில் மிக எளிதானதும், அதீத சக்தி வாய்ந்ததும் ஆனது தேவதா பாதாரவிந்தங்களில் மங்கலப் பொருட்கள் கொண்டு, சக்தியின் ஸகல லீலைகளையும் போற்றும் வகையில் அமைந்த பெயர்களைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனை எனும் வழிமுறை ஆகும்.
சாக்த சாஸ்திரங்கள் - மிக உயர்ந்த வழிபாட்டு முறையாக - லலிதா ஸஹஸ்ரநாமத்தினை அறுதியிட்டுக் கூறுகின்றன.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - வேதங்களுக்கு நிகரானதும், அம்பிகையின் வாக்கு தேவதைகளால் அருளப்பட்டதும், ஸ்ரீ ஹயக்ரீவ பெருமான் -லோபாமுத்ரை ஸஹித அகஸ்தியருக்கு உபதேசித்து உலகோருக்கு அருளியதும், இலக்கணக் குறைகள் இல்லாததும், எளிய வார்த்தைகள் கொண்டதும், அழகிய சந்தங்களுக்கு சொந்தமானதும், கேட்பதற்கு மிக ரம்மியமானதும், பக்தர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சொல்லத் தக்கதும், அம்பிகையின் அனைத்து அம்சங்களையும் பகர்வதும், யந்திரம், மந்திரம், தந்திரம் என மூவகை வழிபாடுகளையும் செய்ததின் முழு பலன் கிடைக்கச் செய்வதும், ஒவ்வொரு எழுத்தும் பீஜாக்ஷரமாக அமைந்து, ஒரு முறை முழுவதும் சொன்னாலே கோடி ஜப பலன் கிடைத்திடுவதும், வேண்டும் வரங்களை உடன் வழங்கிடுவதில் நிகரற்றதும், எதிர்ப்புகளை அறவே நீக்கிடுவதும், பாபங்களை அழித்து புண்ணியங்களைப் பெருகச் செய்வதும் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது.
தில்லை வாழ் அந்தணர்கள் எனும் தீக்ஷிதர்கள் : இம்மஹா வைபவத்தை நடத்தித்தரும் பெரும் பொறுப்பை - சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படும் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் எனும் ஸ்தலத்தில், ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்திக்கு, அனுதினமும், ஆறுகாலங்களிலும் பூரண வைதீக நெறிமுறைப்படி, அர்ப்பணிப்பு உணர்வோடு, பூஜைகள் செய்வதற்காகவே பூமிக்கு ஈசனால் அழைத்து வரப்பட்டவர்களான - தீக்ஷிதர்கள் ஏற்றுள்ளார்கள். அவர்கள் ஏப்ரல் 2016ல் நடராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனை செய்து பெரும் சாதனை புரிந்தவர்கள். அரனுக்கு கோடி அர்ச்சனை செய்த திருக்கரங்களால், நமது ஆலய அம்பிகைக்கு கோடி அர்ச்சனை செய்ய இசைந்துள்ளார்கள். அற்புதமான ஆலயத்தில், அம்பிகையின் ஆயிரம் பெயர்கள் கொண்டு, அந்தணர்களின் திருக்கரங்ளால் கோடி அர்ச்சனை மஹா வைபவத்தைக் காண்பது அரிதிலும் அரிதான மகத்தான நிகழ்வு.
நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும் இந்த மஹா மஹா வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு, ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகையின் பரிபூரண அருளால் அனைத்து பயன்களையும் பெற வேண்டுகின்றோம்.
------------------------------------------------------------------------------------
கோடி அர்ச்சனை ஸர்வஸாதகம் :
நி.த. நடராஜ தீக்ஷிதர்
9443479572
&
உ.வெங்கடேச தீக்ஷிதர்
9894406321
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்கள்
------------------------------------------------------------------------------------
கேரளா, கொல்லங்கோடு ஸ்ரீ விஸ்வநாதர் ஆலய அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் : Sivagama praveen Vamadevasivam V.Ravi gurukkal
------------------------------------------------------------------------------------
இங்ஙனம்
ஸ்ரீ ராமசந்திரன்
ஆலய நிர்வாகிகள்
கிராம பொதுமக்கள்
இந்த மாபெரும் வைபவத்திற்கு நிதியுதவி, பொருளுதவி செய்து, நன்கொடைக்கான முறையான ரசீதும், விசேஷ பிரஸாதங்களும் பெற விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
C.Ramachandran, II/83. Double St, Pudugramam, Kollengode-678506. Kerala State
தொலைபேசி : 04923 262362, 0422 2972926,
அலைபேசி எண்கள்: +91 9446290638, 9488744486
மெயில் ஐடி: ramachandran.chidambaram@gmail.com & chidamba_ram@yahoo.co.in
வெப் ஐடி : http://srimatrenamaha.blospot.in
Bank account details:
State Bank of Travancore, Kollengode Branch, Gayatri complex, Kollengode-678506.
Account no: SB 57042868283
IFSC Code: SBTR0000184
MICR Code: 678009102
சுபமஸ்து ||

Monday, January 18, 2016

தில்லையே பூலோக கயிலாயம் ஆன தினம். ( தைப் பூசம் ) 24-01-2016 (ஞாயிறு )



 
                                                                          
                                                                     சிவமயம்
                                                               திருச்சிற்றம்பலம்
                                   
ஆக்கம் - உ.வெங்கடேச தீக்ஷிதர் M.A.,
              தில்லையே  பூலோக  கயிலாயம் ஆன தினம். ( தைப் பூசம் ) 24-01-2016 (ஞாயிறு )
      பதஞ்சலியும் வ்யாக்ர பாதரும் தவம் செய்து பெற்ற செல்வத்தை ( தில்லைத் திருநடனத்தை) திருமூலர் தன்னுடன் சேர்த்து எட்டு பேர் பார்த்தோம் என்கிறார் இந்த பாடலில் ,
 நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் , நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி ,                            மன்று தொழுத பதஞ்சலி வ்யாக்ரமர், என்ற இவர் என்னுடன் என்மருமாமே .
   பின் வரும் பாடலில் உலக மையமாக உள்ளது என்று
1.       தேவருரைகின்ற சிற்றம்பல மென்றும் ,   தேவருரைகின்ற சிதம்பர மென்றும்,     தேவருரைகின்ற திருவம்பல மென்றும், தேவருரைகின்ற  தென் பொதுவாமே .
    பதஞ்சலி வ்யாக்ர பாத மகத்துவம் சொல்லும் சில பாடல்களைக் காண்போம்.
     ஸ்ரீ நடராஜர் துதி
2.       ஆராலுங் காணுதற்கரிய சோதி  அம்பலத்தி லருளுருவா யணங்கு போற்ற                          பாரோரும் விண்ணோரும் பணிந்து போற்ற பதஞ்சலியும் புலிமுனியு மகிழ்ந்து காண        சீராரும் பொன்மயனற் பணிகள் செய்ய தில்லை மூவாயிரவர் தினமும் போற்ற                    மாறாத பேரின்பம் வழங்கு கின்ற  மன்றாடு மலர்ப்பாதம் போற்றி.  
  
3.        பதஞ்சலிக் கருளிய பரம நாடக என்று , பத்திதலைவர் பாட்டுடைப் பெரியோய், இதந்தரு மடந்தையோடு இரணிய மன்றில் , என்றும் நடஞ்செய இசைத்தாய் போற்றி, மதந்தரு மற்ற சமயிகள் எல்லாம் , மயங்கி வாடிட வைத்தாய் போற்றி ,சிதம்பர நடம்பயில் செழுங்கழல் நினது ,  செல்வமாம் எமக்கும் சேர்ப்பாய்  போற்றி.
பொருள் - மாணிக்கவாசகரால் " பதஞ்சலிக் கருளிய பரம நாடக " என்று பெருமை உடையவர், உயிர்கள் உய்ய சிவாகாமியுடன் ஸ்ரீ நடராஜரை தாண்டவம் ஆட இசைய வைத்தாய் மற்ற மதத்தவர் மயங்கி வாட வைத்தாய் , ஞான சபையில் தாண்டவத்தை, செல்வத்தை ,எளியேனுக்கும் அருள் செய் . என்றார்.
4.        தில்லையிலே நீ வந்து ஆட வேண்டும், தேச முள்ளார் அது கண்டுவாழ வேண்டும்,     எல்லையிலாப் பேரின்பம் எய்த வேண்டும், எவ்வுலகும் இதற்கு ஈடு இல்லை என்று, நல்லவர்கள் எல்லோரும் சொல்ல வேண்டும், நாதனே என்றென்று வேண்டிச்செய்த ,  வல்லார்கள்     பதஞ்சலிமா வியாக்ரபாத , மாமுனியை எப்போதும் வாழ்த்துவோமாக .
பொருள்- பலகாலம் தவம் செய்து சிதம்பரத்தில் பூலோக கையிலாயமாக விளங்க வேண்டும் என்று வேண்டிப் பெற்ற பதஜலியையும் , வ்யாக்ர பாதரையும் வாழ்த்து வோமாக!
5.       அந்தணர்கள் ஒரு மூவாயிரவரோடும், அருள் பெற்ற சிவகணங்கள் அயன்மாலோடும், செந்தழல்போல் திருமேனி ஒளியுங்காட்டி , சிவகாமி அம்மையுடன் நடனங்காட்டி , வந்தருளி இரு முனிவர் தவத்திற்காக , மாநடனக் காட்சியினை வையத்தார்க்கு, சந்தத்முங்  காண வரும் கருணை செய்த , தவமுனிவர் மெய்யருளைச் சாற்றோணாதே!

பொருள்- தேவர்கள்,பிரம்மா,விஷ்ணு, தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரோடும், சிவகாமி அம்மையோடும்,   தில்லையில்   நடனத்தை எல்லோரும் காணும்படிச் செய்த தவ முனிவரின் கருணை சொல்லி முடியாது. அந்தணர்கள் ஒரு மூவாயிரவரோடும், அருள் பெற்ற சிவகணங்கள் அயன்மாலோடும், செந்தழல்போல் திருமேனி ஒளியுங்காட்டி , சிவகாமி அம்மையுடன் நடனங்காட்டி , வந்தருளி இரு முனிவர் தவத்திற்காக , மாநடனக் காட்சியினை வையத்தார்க்கு, சந்தத்முங்  காண வரும் கருணை செய்த , தவமுனிவர் மெய்யருளைச் சாற்றோணாதே!

பொருள்- தேவர்கள்,பிரம்மா,விஷ்ணு, தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரோடும், சிவகாமி அம்மையோடும்,   தில்லையில்   நடனத்தை எல்லோரும் காணும்படிச் செய்த தவ முனிவரின் கருணை சொல்லி முடியாது.
      தென்றிசைக்கோர் பெருஞ்செல்வம்
6.       அருள் பெற்ற பெரியோர்கள் அநேகருண்டு ஆனாலும் பதஞ்சலியார் புலியைப் போல தெருள் பெற்ற மாமுனிவர் உலகிலில்லை தென்றிசைக்கோர் பெருஞ்செல்வம் தேடித் தந்தார்  பொருள் பெற்ற திருக்கூத்து புவனம் உய்ய பூரணிகண் டுளம்மகிழப் புரிந்து வைத்த இருள் பெற்ற உலகினுக்கு ஒளியைத் தந்த  இருமுனிவர் பதந்தொழுது இனிது வாழ்வாம்.
பொருள் -: சிவபெருமானுடைய அருளைப் பெற்றவர்கள் எண்ணில்லாதவர்கள். ஆனால் பதஞ்சலி வியாக்ரபாதரைப் போல அருள் பெற்றவர்கள் உலகத்தில் இல்லை. தென் திசைக்கு ஒப்பற்ற பெருஞ்செல்வத்தைத் தேடித் தந்தார்கள். பஞ்ச கிருத்திய மூலமாக உயிர்களுக்கு  அருள் செய்யும் திருவுளங்கொண்டு பொருளுடைய திருக்கூத்தினை உலகம் உய்ய உமாதேவி கண்டு மகிழ , மயக்கம் பொருந்திய உலகத்திற்கு ஞானமாகிய ஒளியைக் கொடுத்த இருமுனிவர் திருவடிக் கமலங்களை தொழுது இன்பமாக வாழ்வோமாக .
விளக்கம் -: சிவபெருமானுடைய அருளைப் பெற்றவர்கள் எண்ணில்லாதவர்கள். தன்னளவிலே பெற்றவர்களும் தமது திருவாக்கின் மூலமாக சிவனுடைய பெருமையைச் சொன்னவர்களும் இன்னும் வெவ்வேறு வகையாக அருளைப் பெற்றார்கள். இந்த இரு முனிவர்களும் (பதஞ்சலி , வியாக்ரபாதர் ) சிவபெருமானைக் கண்டு அளவில்லாத அருள்,பெற்று நடனக் காட்சியைக் கண்டு எப்போதும் திருக்கூத்தாடும்படிச் செய்து எக்காலமும் ,எல்லோருங்கண்டு பேரின்பத்தை அடையும்படிச் செய்தவர்கள். அதனால் இவர்களைப் போல அருள் பெற்றவர்கள் இல்லை என்பது உண்மையே. இறைவன் மற்றவர்களுக்கு வரம் கொடுத்து விட்டுப்  போய்விடுவான் . இவர்களுக்கு வரம் கொடுத்து உலகத்தாருக்கு வரம் கொடுப்பதற்காக அம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான். இதனால் பூரணி கண்டு மகிழ்கிறாள். புவனம் உய்ந்தது. மயக்கம் பொருந்திய உயிர்கள் அது நீங்கி தெளிவாகிய ஞானத்தைப் பெற்றது. இதுபோல யாரும் வரம் பெறவில்லை.            இருமுனிவர் வாழ்த்து .

7.        தில்லைவாழ் அந்தணர்தம் அடியாற்கும் அடியேன் என்று அருளினார் திருவாரூர் தியாகராசர், தில்லைவாழ் அந்தணர் ஒருவரைக் காணாது மனம் திகைத்து நின்றான் தெய்வ மன்னன் எல்லையிலா அருளாலே யாமஅவரில் ஒருவரென இயம்பினார் அம்பலத்தில் ஆடுவாரே நல்லதவப் பதஞ்சலியும் புலி முனியும் பாடுபட்டு அழைத்த பேரு நன்மை தானே.    

விளக்கம் _: திருவாரூரிலே சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு திருத்தொண்டத் தொகைபாடுவதற்கு , தில்லைவாழ் அந்தணர்தம் அடியாற்கும் அடியேன் என்று முதலடி தந்தருளினார் . தியாகராஜர். முன்னொரு சமயம் பிரம்ம தேவர் அந்தர்வேதி என்னும் இடத்தில் மிகப் பெரிய வேள்வி ஒன்று செய்யக்கருதி தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேர்களையும் அழைக்கத் தில்லைக்கு வந்து அவர்களை வேண்டினார். அப்போது நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும் அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்தால் வருவதாக வாக்களித்து ப்ரம்மாவுடன் சென்றனர். யாகம் சிறப்பாக முடிவுற்றது. பின் அந்தணர்கள் தில்லைக்குப் புறப்பட்டனர். பிரம்மதேவன் இதைக் கண்டு வந்த அதிதிகளுக்கு அன்னமிடாமல் அனுப்புகிறோமே என வருந்தி சாப்பிட்ட பின் செல்லலாம் என்று வற்புறுத்தியும் ஸ்ரீ நடராஜரைப் பூஜை செய்யாமல் உண்ணோம் எனக்கூற பிரம்மா மிகமிக வருந்தி ஈசனை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினார். அவரது உண்மையானப் பிரார்த்தனைக்கு இறங்கி வேள்வி தீயிலிருந்து ஜ்யோதிர்மயமான ஒரு உருவம் கிளம்பியது .அதைக் கண்ணுற்ற தீக்ஷிதர்கள் யாகத் திரவ்யங்களான  பால், தேன், சந்தனம் இவைகளால் அதை குளிரச் செய்து பார்த்ததில்      நடராஜரின் உருக்கொண்ட ப்ராதேசமாத்ர அளவு கொண்ட மாணிக்கமூர்த்தி தென்பட்டது.      பிரம்மா  இதைக் கண்டு களிப்புற்று ஈசனின் அருளாலேயே வந்தது இம்மூர்த்தி, ஆகையால் இம்மூர்த்தியைப் பூஜை செய்து விட்டு உணவு அருந்த வேண்டினார் . அந்தணர்கள் அவர்

வேண்டுகோளுக்கிணங்கி அம்மூர்த்தியையே பூஜை செய்துவிட்டு உணவருந்தினர். பிறகு இவர்களை ஒவ்வொருவராக தனித்தனி இரதத்தில் ஏறச்செய்து மூவாயிரம் இரதம் சூழ ஹிரன்யவர்மன் என்ற அரசனை  முதலாகக் கொண்டு தில்லையின் எல்லையை அடைவிக்க ஏற்பாடு செய்தார். அதன்படியே எல்லையை அடைந்ததும்  ஒவ்வொருவராக எண்ணிப் பார்க்கும் சமயம் ஒருவர் இல்லாமையைக் காண ஹிரன்யவர்மன் மிக வருந்தினான். அந்தோ! என்செய்வேன்! ஈசா அருளுவாய் என பலமுறை வேண்டித் துதித்தான். உடனே அசரீரியான ஒலி கேட்டது : வருந்தாதே தில்லை மூவாயிரவருள் நானும் ஒருவன் என்று இதைக்கேட்டு மிகவும் சந்தோஷம் தில்லைவாழ் அந்தணர்களை நடராஜராகவே எண்ணி அவர்களுக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து அவர்கள் தங்குவதற்கு மாடமாளிகைகள் கட்டி வாழச் செய்தான். அது முதற்கொண்டு இன்றளவும் அவர்களால் கொண்டுவரப்பட்ட மூர்த்திக்கு (ரத்தினசபாபதி) பால், தேன்,சந்தனம் இவைகள் மட்டும் தான் தினமும் காலை இரண்டாவது காலத்தில் (11 மணிக்கு ) அபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் இவர்களின் பெருமை தெளிவுற விளங்குகிறது.   
        மேற்கண்ட கருத்தும் வரலாறும் தெரிய நல்லதவப் பதஞ்சலியும், புலிமுனியும்   பாடுபட்டு அழைத்த பேரு நன்மை தானே .               ( பதஞ்சலி வியாக்ரபாத மகத்துவம் )
கடந்த 15-01-2016 அன்று முதல் ஒன்பது தினங்கள் ஆதி மூலநாதர் சன்னதியில் அர்த்தஜாம பூஜையில் பதஞ்சலி ,வ்யாக்ரபாதர் வழிபடும் நிகழ்வும், தைப் பூசத்தன்று பஞ்ச மூர்த்திகளுடன்   பதஞ்சலி ,வ்யாக்ரபாதரும் நான்கு வீதிகளிலும் வலம் வந்து சிவகங்கையில் தீர்த்த வாரி உத்சவமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் சன்னதியில் அன்னப் பாவாடையுடன்  பதஞ்சலி, வ்யாக்ரபாதர் தரிசனமும் நடைபெறும்,
தில்லையிலே தைப் பூசத்தன்று நடைபெறும் தீர்த்தவாரி உத்சவத்தில் கலந்து கொண்டு அருள் பெறுவோமாக.