


சைவத்தில் திருமுறைகள் என்பது பன்னிரண்டாகும் .அவற்றில் முதல் மூன்று திருமுறைகள் திரு ஞானசம்பந்தர் அருளியது.நான்கு, ஐந்து,ஆறு, திருமுறைகள் திருநாவுக்கரசர் அருளிச் செய்தது. ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது, எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளியது. ஒன்பதாம் திருமுறை சேந்தனார் மற்றும் சிலரின் பாடல்கள் உள்ளன. பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரமாகும். பதினோராம் திருமுறைநம்பியாண்டார் நம்பிகள் வகுத்தது. அவருடைய நூலும் உண்டு. பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) ஆகும். இதில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தை தரிசனா தொலைக் காட்சியில் தினமும் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள் அதன் ஒரு பகுதி இங்கே வழங்கப் படுகிறது. இதன் தொடர்ச்சியை நம்முடைய இணைய தளத்தில் பார்த்து கேட்டு பயன் பெற வேண்டுகிறேன். இங்கே கிளிக் செய்யவும். http://youtu.be/QORYuQm2N8A