






இப்போது
எல்லா இடங்களிலும் ஏகாதச ருத்ரம், மஹாருத்ரம், அதி ருத்ரம் என்று பல விதமாக செய்திகள் கேள்விப் படுகிறோம்.
சிதம்பரத்தில் மஹா ருத்ரம் செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததும், குறைந்த செலவில் (வெளி ஊர்களில்செய்வதாக இருந்தால் வேதப்
பிராமணர்களை பல ஊர்களில் இருந்து அழைத்து வந்து அவர்கள் தங்குவதற்கு மற்றும் உணவு
ஏற்பாடு என்று ஆகும் செலவுகளை தவிர்த்து) மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகளை சிறப்பாகவும் மன நிறைவோடும் செய்ய
முடியும்.
.(தில்லை ஸ்ரீ நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகம் நடைபெறுகிறது. .மூன்று அபிஷேகங்கள் நக்ஷத்திரத்திலும் ,(திருவோணம் (சித்திரை) , உத்திரம் (ஆனி), திருவாதிரை (மார்கழி) , மூன்று அபிஷேகம் திதியிலும் ( வளர்பிறை சதுர்த்தசி ஆவணி ,புரட்டாசி , மாசி ) தினமும் நடைபெறுவது ஆறு கால அபிஷேகம் (மார்கழியிலும், கிரஹணத்தின் போதும் மேலும் ஒரு காலமும், சிவராத்திரியில் மூன்று +ஒன்று (அர்த்தஜாமம்) என்று கூடுதலாகும்.) மனிதர்களுக்கு ஒருநாள் 24 மணிநேரம், தேவர்களுக்கு ஒரு நாள் (365 நாட்கள் ) அதன் படி மனிதர்களுக்காக தினமும் ஆறு காலமும் , தேவர்களுக்காக வருஷத்தில் ஆறு அபிஷேகமும் நடைபெறுகிறது.( அயனங்கள் இரண்டு தட்சிணாயணம் (இரவு வேளை ) (ஆவணி (சாயரக்ஷை ) , புரட்டாசி (இரவு இரண்டாம் காலம்) , மார்கழி (காலசந்தி ) உத்தராயணம் (பகல் வேளை ) (சித்திரை (பகல் இரண்டாம் காலம்) ,ஆனி (உச்சிக்காலம்) ,மாசி (அர்த்தஜாமம்).
மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகளைப் பற்றி விரிவாக காண்போம்.
மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற வற்றை செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது.
முதலில் ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியிடம் அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், நாந்தி, ரக்ஷாபந்தனம், மதுபர்க்கம், என்று பூர்வாங்கமாக செய்து பிறகு
மஹாருத்ரம்
என்றால் 1x11=
ஏகாதச ருத்ரம் ,11x11=121 ருத்ராபிஷேகம், 121x11=1331 (மஹாருத்ரம்
)1331x11=14641
(அதிருத்ரம்)
என்று
ஸ்ரீருத்ர ஜபம் தீக்ஷிதர்களைக்கொண்டு (வஸ்திரம் கொடுத்து ) ஏகாதச ருத்ர பாராயணமும், செய்து நடவானப் பந்தலில் 216 (வெள்ளி
) கலசங்கள் வைத்து ஆவாஹனம் செய்து பிரதானமாக ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த
நடராஜ மூர்த்திக்கு இரண்டு தங்க குடங்கள் வைத்து ஆவாஹனம்செய்து
ஸ்ரீ
ருத்ரத்ரிசதி அர்ச்சனை செய்து,
மஹாருத்ரம்
என்றால் 13 ஆச்சாரியர்களும், அதிருத்ரம் என்றால்
14 ஆச்சாரியர்களும் (சோபனம் கொடுத்து
) ஏகாதசருத்ர ஹோமம் செய்து,வடுக பூஜை,கன்யா பூஜை,சுவாசினி பூஜை, தம்பதி பூஜை,கோ பூஜை,கஜ பூஜை,அஸ்வ பூஜை செய்து ஸ்ரீ சிவகாம
சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்குமஹா அபிஷேகம்.
அளவுக்கு
அதிகமான (விபூதி,பால்,தயிர்,தேன், நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம், பழச்சாறு, இளநீர், பன்னீர், சந்தானம்,மலர்கள் ) போன்ற திரவியங்களைக்
கொண்டு மஹா அபிஷேகம் செய்து பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்து கால பூஜைகள் செய்வது
எப்போதும் பழக்கமாகவுள்ளது. இங்கே மஹாருத்ரத்தன்று மதியம் தீக்ஷிதர்கள் ஆயிரம்
பேருக்கு போஜனம் செய்வித்து தக்ஷிணை கொடுத்து ஆசி பெறமுடியும். எளிதில் மஹாருத்ரம், அதிருத்ரம் செய்ய தகுதியான இடம் சிதம்பரம் ஆகும்.